லண்டன்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராகீமின் நெருங்கிய கூட்டாளி ஜபீர் மோடி. இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆ்கஸ்ட்டில் லண்டனில் கைது செய்யப்பட்டார். ஜபீரை நாடு கடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, நாடு கடத்தப்படுவதற்கு எதிராக அவர் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி ஜான் ஜனி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘ஜீபரை நாடு கடத்துவது தொடர்பான முடிவை வெளியுறவு துறையே எடுக்கலாம்,’ என உத்தரவிட்டார். இதை உள்துறை அமைச்சர் பிரிதி படேல் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார். , ஜபீரை நாடு கடத்துவதற்கான நடைமுறைகள் 2 மாதங்களில் தொடங்கும் என தெரிகிறது.