காரைக்குடி: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு தொடர்பா என சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.