சென்னை: குரூப்-2ஏ முறைகேடு இடைத்தரகர் ஜெயக்குமாரை தனக்கு 5 ஆண்டுகளாக தெரியும் என கைது செய்யப்பட்ட சித்தாண்டி வாக்குமூலம் அளித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற விரும்புவோரிடம் இருந்து பணத்தை பெற்று ஜெயக்குமாரிடம் அளித்து வந்தேன். தேர்வாணைய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் உடனான தொடர்பு குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனவும் கூறியுள்ளார்.