டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தால் காவிரி பாசன மாவட்டங்கள் அழிந்து விடும் என அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் மாநிலங்களவையில் பேசினார். ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். நீட் விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.