×

சேலத்தில் சாலையோரம் தூங்கும் முதியவர்களை கொல்லும் சைக்கோ கொலையாளி : சிசிடிவி காட்சியை பார்த்து போலீசார் அதிர்ச்சி

சேலம் : சேலத்தில் 2 நாட்களில் நடந்துள்ள 2 கொலைகளும்  ஒரே மாதிரியாக இருப்பதால் கொலையாளி சைக்கோவா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் வணிக வளாகத்தில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை இளைஞர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. டிப் - டாப் ஆக ஆடை அணிந்து வந்த இளைஞன், சுற்றி முற்றும் நோட்டமிட்டு கொலையை அரங்கேற்றுவது அதில் பதிவாகி உள்ளது.

கொல்லப்பட்ட 85 வயது முதியவர் தங்கமுத்து, அதே வணிக வளாகத்தில் முன் கூடையில் பழம் வியாபாரம் செய்து வந்தவர். கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இதே போல் நேற்று சேலம் காசகாரனுர் சாலையில், தையல் கடை முன்பு தூங்கிக் கொண்டிருந்த முதியவரும் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். 2 கொலைகளிலும் கொலையாளிகளின் விவரம் ஒரே மாதிரியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கொலையாளி சைக்கோவா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. 


Tags : road ,CCTV ,Salem , Salem, Killer, Psycho, CCTV, Scenes
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...