×

வெடிகுண்டு வீசி நிலைகுலைய செய்து வாலிபர் வெட்டிக்கொலை

குன்றத்தூர்: சென்னை அருகே உள்ள மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (42). கடந்த சில மாதங்களுக்கு முன், தனது மனைவி பாண்டியம்மாள் மற்றும் இரு குழந்தைகளுடன் குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் பகுதிக்கு குடி  பெயர்ந்தார்.இந்நிலையில் நேற்று மாலை, இவரது வீட்டின் கதவை காரில் வந்த கும்பல் ஒன்று தட்டியது. முருகன் கதவை திறந்து வெளியே வந்தபோது வீட்டின் அருகே மறைந்து இருந்த ஒரு கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் முருகன் மீது 2 நாட்டு   வெடிகுண்டுகளை வீசியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத முருகன் நிலை குலைந்து நின்றார். உடனே அவரை சுற்றிவளைத்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு முருகன் ரத்தவெள்ளத்தில்  மயங்கி சாய்ந்தார்.

இதையடுத்து முருகன் இறந்ததை உறுதி செய்த அந்த கும்பல் சாவகாசமாக கிளம்பி சென்றது. இதனிடையே முருகனின் அலறல் சத்தம்கேட்டு அவரது மனைவி பாண்டியம்மாள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, பார்த்து அதிர்ச்சி  அடைந்தனர். தகவலறிந்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பிய 7 பேர்  கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  முதற்கட்ட விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட முருகன் மீது மதுராந்தகம் காவல் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது  தெரிய வந்தது.


Tags : Plaintiff , Plaintiff, cut off
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது