×

சிஏஏ போராட்டத்தில் மயங்கி விழுந்து பெண் பலி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா பார்க் சர்க்கஸ் மைதானத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து 60க்கும் மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்  போராட்டத்தில் கலந்து கொண்ட  என்டலி பகுதியை சேர்ந்த சமிதா கதுன்(57) என்ற பெண், நள்ளிரவு இரண்டு மணியளவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவர் மயங்கி விழுந்ததை அடுத்து  உடனடியாக அருகில் உள்ள  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Tags : fight ,CAA ,CAA Problem Woman , CAA struggle, Woman ,frenzy ,kills
× RELATED சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல்...