×

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு திருச்சி 3 மாவட்டங்களாக பிரிப்பு: மாவட்ட செயலாளர்கள் நியமனம்

சென்னை: திருச்சி மாவட்டங்களை 3 ஆக பிரித்து, திமுக பொது செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதற்கான மாவட்ட செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு: திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் திருச்சி வடக்கு- திருச்சி தெற்கு ஆகிய மாவட்டங்கள், திருச்சி வடக்கு-திருச்சி மத்திய- திருச்சி தெற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

முசிறி, துறையூர் மண்ணச்சநல்லூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி வடக்கு மாவட்ட செயலாளராக காடுவெட்டி தியாகராஜனும், திருச்சி மேற்கு, திருவரங்கம், லால்குடி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக வைரமணியும், திருவெறும்பூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏவும் நியமிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட நிர்வாகிகள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : K Anbalakan ,districts ,Trichy ,DMK ,District Secretaries ,K Anbalagan , DMK General Secretary, K Anbalagan, Notice, Trichy, 3 Districts, Separate, District Secretaries, Appointment
× RELATED தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள்,...