×

ரூ.3 கோடியில் சார்பதிவாளர் அலுவலகங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: ரூ. 3 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலங்கங்களை திறந்து வைத்த முதல்வர் உதவி ஆணையர்களுக்கு பணி ஆணைகளையும் வழங்கினார். வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூரில் ரூ.72 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம் மற்றும் துவரங்குறிச்சி, மதுக்கரை மற்றும் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் ரூ. 2.68 கோடியில் கட்டப்பட்டுள்ள 3 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு மூலமாக உதவி ஆணையர் மற்றும் மாவட்டப் பதிவாளர் பதவியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Tags : Relatives Offices , Rs.3 crores, Dependents, Offices, Chief Minister, Opening
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...