சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் 3 உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரோடு உதவி ஆணையர் நந்தகுமார் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயில் உதவி ஆணையராகவும், அந்த கோயில் உதவி ஆணையர் சுரேஷ் சென்னை நகை சரிபார்ப்பு உதவி ஆணையராகவும், ெசன்னை நகை சரிபார்ப்பு உதவி ஆணையராக பணி மாறுதல் செய்யப்பட்டிருந்த சூரியநாராயணன் கரூர் உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், உதவி ஆணையர் நந்தகுமார் ஈரோடு உதவி ஆணையர் பொறுப்புகளை உதவி ஆணையர் ஜோதி லட்சுமியிடம் ஒப்படைக்க வேண்டும்.
உதவி ஆணையர் சுரேஷ் நகை சரிபார்ப்பு உதவி ஆணையர் பொறுப்பை ஏற்று வனிதாவை கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிக்க உத்தரவிடப்படுகிறது. பணி மாறுதல் செய்யப்பட்ட உதவி ஆணையர்கள் தற்போது பணிபுரியும் பணியிடத்தில் இருந்து விடுபட்டவுடன் உடனடியாக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ள இடங்களில் பணியில் சேர்ந்து அதற்கான பொறுப்பு மாற்றுச்சான்று மற்றும் பொறுப்பு பட்டியலை அனுப்பிட வேண்டும் என்று கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.