சென்னை: மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மலர்தூவி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.