×

நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாட்டம் : அசாமில் 2 இடங்களில் குண்டு வெடித்ததால் பரபரப்பு

திப்ரூகார்: அசாம் மாநிலம் திப்ரூகார், சொனாரி ஆகிய இரு இடங்களில் குண்டு வெடித்துள்ளது. நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அசாமில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீக்கிய மதவழிப்பாட்டு தலம் சந்தை அருகே 2 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் 71வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு, காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற மத்திய அரசின் அடுக்கடுக்கான அதிரடி நடவடிக்கைகளால் நாடு முழுவதும் போராட்டக்களமாக மாறி உள்ளது. மேலும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் காஷ்மீரில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இவை எல்லாம் தீவிரவாதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருப்பதால், இந்தாண்டு குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளனர். மேலும், பல இடங்களில் இவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அச்சமும் நிலவி வருகிறது இச்சதிகளை முறியடிக்க, மத்திய அரசும் மாநில அரசுகளும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள்,பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில்  அசாம் மாநிலம் திப்ரூகார், சொனாரி ஆகிய இரு இடங்களில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Republic Day ,celebration ,country ,Assam ,Blast ,India , Assam, Blast, Republic Day, India
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...