டெல்லி: கனடாவில் தாக்கப்பட்ட தமிழக மாணவி ரசேல் குடும்பத்துக்கு உதவ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார். கனடாவின் டொரண்டோ நகரில் தமிழக மாணவி ரசேல் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். ரசேலின் பெற்றோர் கனடா செல்ல உடனே விசா வழங்க வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.