விழுப்புரம்: குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான போலீஸ் சோதனையில் பழைய வழக்கில் தேடப்பட்டு வருபவர்களை கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 584 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.