×

சென்னையில் 1654 மையங்கள் மூலம் 6.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: இன்று முதல் 3 நாட்களுக்கு வீடுவீடாக ஆய்வு

சென்னை: சென்னையில் நேற்று 1654 மையங்கள் மூலம் 6.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் 3 நாட்களுக்கு வீடுவீடாக ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின்படி போலியோவை ஒழிக்கும் வகையில் தமிழக அரசு போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். இதன்படி இந்த ஆண்டிற்கான சிறப்பு முகாம் வரும் நேற்று நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் 1438 நிரந்தர மையங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையம், வழிபாட்டுதலம், மார்க்கெட் பகுதிகளில் 165 மையங்கள், செங்கல் சூளைகள், கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் 45 மையங்கள் என்று மொத்தம் 1645 மையங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் செயல்படும் மையங்கள் காலை முதல் இரவு வரை செயல்பட்டது. இதை தவிர்த்து நடமாடும் மையங்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அதன்படி தற்போது வரை 6 லட்சத்து 52 ஆயிரத்து 962 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று முதல் வீடாக வீடாக சென்று ஆய்வு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி இரண்டு பணியாளர்கள் ஒரு குழுவாக பிரிந்து 3 நாட்களுக்கு வீடு வீடாக சென்று ஆய்வு செய்வார்கள. இந்த ஆய்வின்போது சொட்டு மருந்து வழங்கப்பட்ட வீடுகளில் X குறியீடும், வழங்கப்படாத வீடுகளில் p குறியீடு போடப்படும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற முகாமில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 596 குழந்தைகளுக்கும், 2018ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற முகாமில் 7 லட்சத்து 50 ஆயிரத்து 902 குழந்தைகளுக்கும், ஜனவரி மாதம் நடைபெற்ற முகாமில் 7 லட்சத்து 59 ஆயிரத்து 536 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : children ,centers ,Chennai , Chennai, 1654 centers, 6.5 lakhs, child, polio drops, medicine
× RELATED கவுன்சலிங் ரூம்