×

டென்ஷனை குறைக்க ‘தர்பார்’ சிவகங்கை போலீசாருக்கு சினிமா காட்டிய எஸ்.பி

மானாமதுரை: சிவகங்கை மாவட்டத்தில் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் போலீசாருக்கு ரஜினியின் தர்பார் படம் காண்பிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட போலீஸ் எஸ்பி ரோஹித்நாதன் பதவியேற்றது முதல் போலீசாருக்கு பல்வேறு சலுகைகள் அளித்து வருகிறார். போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த 2 மாதமாக உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு காவல்நிலையங்களை சேர்ந்த போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க சினிமாவிற்கு அழைத்துச் செல்ல எஸ்பி முடிவு செய்தார்.

இதற்காக, மானாமதுரையில் ரஜினியின் தர்பார் படம் ஓடிய சீனியப்பா தியேட்டருக்கு போலீசார் குடும்பத்துடன் வாகனங்களில் நேற்று அழைத்து வரப்பட்டனர். தியேட்டருக்குள் நுழைந்த குடும்பத்தினருக்கு சந்தனம், குங்குமம், பூ, கற்கண்டு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. போலீசார் தங்களது குடும்பத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து படம் பார்க்கவும், இடைவேளையின்போது டீ, பிஸ்கட் வழங்கவும் ஏற்பாடு செய்தார். கண்டிப்பிற்கு பெயர்போன எஸ்பி திடீரென பரிவுடன் தங்களுக்கு பொழுதுபோக்க ஏற்பாடு செய்ததை நினைத்து போலீசாரும் அவர்களது குடும்பத்தினரும் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.

Tags : SP ,Sivaganga ,police cinema , Tension, Reduce, Durbar, Sivaganga Police, Cinema, SP
× RELATED ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை