×

முகிலனுக்கு ஜாமீன் நிபந்தனையில் மாற்றம்

மதுரை: ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன் (எ) சண்முகம் (53). சமூகப்போராளியான இவர், ஒரு பெண்ணை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக, சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் முகிலனுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட் கிளை, கரூரில் தங்கியிருந்து இரு நாட்களுக்கு ஒருமுறை காலை 10.30  மணிக்கு, கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட  நிபந்தனை விதித்திருந்தது. இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி முகிலன், ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வாரம் ஒரு முறை ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென முந்தைய நிபந்தனையில் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.


Tags : Mukhilan Mukhilan , Mukhilan, condition of bail
× RELATED ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத்...