×

மின்சாரம் தாக்கி, பாம்பு கடித்து உயிரிழந்த 24 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: மின்சாரம் தாக்கி, பாம்பு கடித்து உயிரிழந்த 24 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரம், செஞ்சி பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயகாந்த் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி, சாமியாடிகுச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் விவசாய நிலத்திற்கு சென்றபோது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
செஞ்சி சேரனூர் கிராமத்தை சேர்ந்த ஜெனகன் மின் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
வேலூர், பலவன்சாத்து கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் தனது வீட்டின் மாடிக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
திருச்சி, ரங்கம் பெருகமணி கிராமத்தில் உள்ள உயர்நிலை பள்ளியில் பயின்று வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அஸ்வின்குமார் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த முருகன் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
திருவள்ளுர் அம்மையார்குப்பம் கிராமத்தை சேர்ந்த குமரன் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை, ரெட்டிவலம் கிராமத்தை சேர்ந்த கமலா விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
நெமிலி, கீழ்க்களத்தூர் மதுரா மானாமதுரை கிராமத்தை சேர்ந்த சேகர் விவசாய நிலத்தில் மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
வாலாசா, தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
வாலாசா, சாணார்பெண்டை கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் அறுந்து விழுந்து மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
திருவாரூர், பெருமாளகரம் கிராமத்தை சேர்ந்த நாடிமுத்து விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி, பேச்சிப்பாறை கிராமத்தை சேர்ந்த சுபாஷ், சஜின் சலோ, மன்மோகன் ஆகிய 3 பேரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை, நெடுங்கல் கிராமத்தை சேர்ந்த சம்பத் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
வேலூர், திருவலம் கூட்ரோடு மின்வாரிய குடியிருப்பை சேர்ந்த மதன்குமார் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
நாகப்பட்டினம், பிராந்தியங்கரை கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் தெருவிளக்கு கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை, காட்டுநாவல் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சிவகங்கை, இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்த ஆதித்யா விவசாய நிலத்தில் உள்ள நிலை கம்பியை பிடித்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
ஈரோடு, நஞ்சனாபுரம் கிராமத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் மின்மாற்றியில் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
ராமநாதபுரம், கல்கிணற்றுவலசை கிராமத்தை சேர்ந்த கார்த்தீஸ்வரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
விருதுநகர், மேலராஜகுலராமன் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் பாம்பு கடித்து உயிரிழந்தார்.
விழுப்புரம், தேவதானம்பேட்டை கிராமத்தை சேர்ந்த லட்சுமி பாம்பு கடித்து உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி, பாம்பு கடித்து உயிரிழந்த 24 பேரின் குடும்பத்திற்கு தலா ₹3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

Tags : family members ,Edappadi , Edappadi
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்