×

களிமண் விலை இருமடங்கு ஏறி விட்டது: மூலப்பொருட்கள் கிடைக்காததால் நலிவடையும் மண்பாண்ட தொழில்

வில்லியனூர்: மண்பாண்டம் செய்வதற்கு மண் உள்ளிட்ட மூலப்பொருட்கள் கிடைக்காததால் மண்பாண்ட தொழில் தற்போது நலிவடைந்து வரும் தொழிலாக மாறிவிட்டது. கடந்த காலங்களில் மண் பானையில் மட்டுமே சமையல் செய்வது வழக்கம். இன்றளவும் கூட மண்பானை சமையலை விரும்புபவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு காரணம், இதில் சமைத்த உணவின் ருசியும், ஆரோக்கியமும் தான். பொங்கல் பண்டிகையும், மண் பானையும் பிரிக்க முடியாதவை. புத்தரிசி, புதுப்பானையில் பொங்கலிட்டு தை மகளை வரவேற்பதே பழந்தமிழரின் வழக்கம். மண்பானை பயன்பாடு அறிவியல் ரீதியாக ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி மற்றும் காற்று, உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை ஆரோக்கியமாக சமைக்க உதவுகிறது. ஆனால் இப்போது நவ நாகரீகம் என்ற பெயரில் வீடுகளில் அலுமினியம், பித்தளை, எவர்சில்வர், வெள்ளி பாத்திரங்கள், பீங்கான், பிளாஸ்டிக் பொருட்கள் அலங்கரித்து சமையலறையை ஆக்கிரமிக்கிறது. இது ஒருபுறம் இருக்க, கடந்த 10 ஆண்டுகளாக மண் பாண்டம் செய்வதற்கு மண்  உள்ளிட்ட மூலப்பொருட்கள் கிடைக்காததால் மண்பாண்ட தொழில் தற்போது நலிவடைந்து  வரும் தொழிலாக மாறிவிட்டது.

மண், தேங்காய் மட்டை, கரும்பு சோலை, விறகு  உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு, மண்பாண்ட  தொழிலை அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறது. இருப்பினும் பாரம்பரிய  தொழிலை கைவிட மனமில்லாத அத்தொழிலாளர்கள் மனம் தளராமல் மண்பாண்ட பொருட்களை  நம்பிக்கையோடு உற்பத்தி செய்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்கி  வருவதால் தொழிலாளர்கள் மண்பாண்ட தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு  வருகின்றனர். இது குறித்து விழுப்புரம் மாவட்டம் கெண்டிங்குப்பம்  பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், தற்போது ெபாங்கல் பண்டிகை நெருங்குவதால் மண்பானைகள் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். ஒரு கிலோ பானை முதல் 10 கிலோ பானை வரை தயார் செய்து வருகிறோம்.  இருப்பினும் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு தொழில் மிகவும் மந்தமாகவே உள்ளது.  மண்பாண்ட பொருட்கள் செய்வதற்கு முக்கிய மூலப்பொருள் களிமண் தான். கடந்த  காலங்களில் மூலப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்தது. ஆனால் தற்போது  தட்டுப்பாடு நிலவுகிறது.  ஒரு லோடு ரூ.3 ஆயிரத்துக்கு விற்ற களிமண்,  தற்போது ரூ.6 ஆயிரத்துக்கு மேல் விற்கப்படுகிறது.
 
கடந்த சில ஆண்டுகளாக வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் மண் அள்ளுவதை தடுத்து நிறுத்தி கெடுபிடி செய்கின்றனர். ஆனால் மணல் கொள்ளையர்கள் ஏரிகளில் மண் எடுக்க விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி தருகின்றனர். அதுவே மண்பாண்ட தொழிலாளர்கள் கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது என்று வருவாய் துறை மீது குற்றம்  சாட்டுகின்றனர். மேலும், மண்ணை சுடுவதற்கான தென்னை மட்டைகள், ைவக்கோல் போன்ற தீ மூட்டும் பொருட்களும் கிடைக்கவில்லை. எனவே மண்பாண்டங்கள்  ெசய்வதற்கு தேவையான மண்ணை தங்கு தடையின்றி கிடைக்க அரசு வழிவகை ெசய்ய  வேண்டும். தற்போது, இத்தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால் இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுவது இல்லை. மேலும், நவீன வளர்ச்சி என்ற பெயரில் இத்தொழில் பின்னுக்கு தள்ளியுள்ளதால் சுண்ணாம்பு சூளை, கூடை பின்னல் போன்ற  நலிவடைந்து வரும் தொழில்களில் மண்பாண்ட தொழிலும் சேர்ந்துள்ளது. இந்நிலை நீடித்தால் எதிர்வரும் காலத்தில் பொங்கல் வைப்பதற்கு மண் பானைகள் என்பதே  கிடைக்காது. மண் பானைகள் அரியவகை காட்சி பொருளாகவே மாறி விடும் என வேதனையுடன் தெரிவித்தார்.

Tags : The clay, fine, and pottery industry
× RELATED யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை...