×

தர்பார் திரைப்பட கருத்துக்கள் சசிகலாவை பற்றி இருக்கலாம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தர்பார் பட கருத்துக்கள் சசிகலாவை பற்றியதாக இருக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியின்போது கூறினார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னை ராயபுரத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் பரிசு 4 நாட்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கப்படும். தர்பார் படத்தில் உள்ள கருத்துக்களை நானும் கேள்விப்பட்டேன். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் பணம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது. இந்த கருத்து நல்ல கருத்துதான்.

இது சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என எண்ணுகிறேன். இது நல்ல கருத்து, இதற்குமேல் இதை பற்றி கூற விரும்பவில்லை. பொதுமக்கள் வரவேற்கக்கூடிய கருத்துதான். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார். தர்பார் படத்தில் சசிகலாவை சீண்டும் வகையில் வசனம் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் ஆள் மாறாட்டம் நடந்து இருக்கலாமோ என்று ரஜினி விசாரணை செய்யும் காட்சியில் உடன் பணிபுரியும் போலீஸ்காரர், ‘காசு இருந்தா ஜெயில்ல கூட ஷாப்பிங் போகலாம். சவுத் இந்தியால கூட ஒரு கைதி அடிக்கடி ஜெயில்ல இருந்து வெளியே ஷாப்பிங் போனதா செய்தியில் பார்த்தேன்’ என வசனம் வருகிறது.


Tags : Minister Jayakumar ,Sasikala , Darbar film, Sasikala, Minister Jayakumar
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...