×

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி; அதிமுகவை பிளவுபடுத்துவேனா?

சென்னை: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள எல்லப்பன் நகர் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு, தண்ணீர் பந்தல் நிகழ்ச்சிக்கு பின் நிருபர்களிடம் கூறியதாவது:
45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நான் நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன். இது மாற்றுக்கட்சியை சார்ந்தவர்களுக்கும் தெரியும்.‌ சட்ட அமைச்சர் என்னை குறித்து கூறிய கருத்து வருந்தத்தக்க ஒன்று. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிந்து புரிந்து, இதுபோன்ற கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை மற்றவரை கூட அரசியல் வாழ்க்கையில் குறை கூறாமல் என் வாழ்க்கை பயணத்தில் நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன். இந்த இயக்கத்திற்கு சோதனை வரும்போது, இந்த தொண்டர்களுக்கு என்றைக்குமே நான் தூணாக நின்று செயலாற்றி இருக்கிறேன் என தெளிவுபடுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் ரகுபதி பேட்டியளிக்கையில், தேர்தலுக்கு பிறகு அதிமுக பிளவுபடும். அது செங்கோட்டையின் தலைமையிலா அல்லது வேலுமணி தலைமையிலா என தெரியவரும் என விமர்த்திருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பின்னர், காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்றார்.

The post முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி; அதிமுகவை பிளவுபடுத்துவேனா? appeared first on Dinakaran.

Tags : minister ,Sengottaiyan ,AIADMK ,CHENNAI ,Ellapan Nagar ,Kanchipuram ,Collector ,
× RELATED எடப்பாடியுடன் மோதலால் பாஜவுக்கு தாவ...