×

பராமரிப்பு பணிகள் காரணமாக நெல்லூர்- நாயுடுபேட்டை இடையே ரயில்கள் ரத்து

சென்னை:  தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: விஜயவாடா சந்திப்பு- சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் நாளை 45 நிமிடம் ஓடூர் ரயில் நிலையத்தில் நிற்கும். சென்ட்ரல்- விஜயவாடா ஜங்சன் இடையே நாளை பிற்பகல் 2.05 மணிக்கு இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் 3.15 மணிக்கு புறப்படும். அதைப்போன்று சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் நாளை ஓடூர் ரயில் நிலையத்தில் 1.05 மணிக்கு நிற்கும். மேலும் சூலூர்பேட்டை- நெல்லூர் இடையே நாளை மற்றும் 14ம் தேதி காலை 8 மணிக்கு இயக்கப்படும் ரயில் நாயுடுபேட்டை- நெல்லூர் இடையேயும், நெல்லூர்- சூலூர்பேட்டை இடையே நாளை மற்றும் 14ம் தேதி 10 மணிக்கு இயக்கப்படும் ரயில் நெல்லூர்- நாயுடுபேட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. 


Tags : Nellore ,Naidupet ,Nellore- Naidupettai Trains , Nellore, Naidupet , trains canceled
× RELATED திருக்கோவிலூர், நெல்லூரில் பயங்கரம்: இரு விபத்துகளில் 6 பேர் பலி