சென்னை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த Y பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு இதற்கு மாற்றாக, இதற்கு இணையான தமிழக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஓ.பி.எஸ்.-க்கு வழங்கப்பட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.