×

மாணவர்களுக்கு அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த கேரள அரசு நடவடிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி, கல்லூரிகளில் காலை பிரார்த்தனை நேரத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை வாசிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார். கோழிக்கோட்டில் கல்லூரி  மாணவர் சங்க தலைவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதை கேரள முதல்வர் பினராய் விஜயன் தொடங்கி வைத்து பேசியதாவது: நமது நாட்டில் தற்போது மிக மோசமான சூழ்நிலை நிலவுகிறது. அரசியல் காரணங்களுக்காக  பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படுகிறது. இதனால் இளைஞர்களின் மனநிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது. பெரும்பாலான மாணவர்களுக்கு நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டம் குறித்து எதுவும் தெரியவில்லை.  எனவே கேரளா முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் காலை பிரார்த்தனை நேரத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை வாசிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் பினராய் வி்ஜயன் பேசினார்.



Tags : Kerala , Students, Constitutional Law Awareness, Government of Kerala
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...