×

நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேடு மே.வங்க பாஜ சூசகம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பாஜ.வினரின் சிஏஏ விளக்க கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் ஆங்கிலம், இந்தி, பெங்காலி உள்ளிட்ட மூன்று மொழிகளில் சிஏஏ தொடர்பான விளக்கங்கள் கொண்ட கையேடு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சட்டம் பற்றிய மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் கேள்வி, பதில் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், `தேசிய குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அசாமில் என்ஆர்சி அமல்படுத்தப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.பாஜ.வின் இத்தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Citizen , Citizen Registry, nationwide
× RELATED ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்களிப்பது...