சென்னை: சட்டவிரோதமாக கறுப்புப் பணத்தை ஹாங்காங்குக்கு கடத்தியதாக சென்னை நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ள 51 நிறுவனங்களில் பெரும்பாலானவை சென்னையை சேர்ந்தவை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 24 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மூலம் ஹாங்காங்குக்கு ரூ.488.39 கோடி கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.