மால்டா: மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் பாம்பு விஷம் விற்கப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, இங்கிலீஷ் பஜார் டவுனில் நேற்று முன்தினம் இரவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த கலியாசாக் பகுதியை சேர்ந்த ரபீக் அலி, ஆஷிக் மண்டல், மசூத் ஷேக் ஆகியோரிடம் இருந்து பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.1.5 கோடி என கணக்கிடப்பட்டு உள்ளது. மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.