×

நெல்லை கண்ணனுக்கு மதுரையில் சிகிச்சை

மதுரை: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை விமர்சித்து பேசியதாக  கைதான பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணனை வரும் 13ம் தேதி வரை சிறையில் அடைக்க நெல்லை நீதிபதி  நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். சேலம் சிறைக்கு அவரை கொண்டு செல்லும் வழியில், மதுரை வந்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே நேற்று முன்தினம் இரவில் நெல்லை கண்ணனை மதுரை மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர். இங்குள்ள சிறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


Tags : Paddy Eyes Nellai , Treatment , nellai kananan
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...