×

‘உன் வீட்டு கண்ணாடியை பார்’ பீகார் முதல்வர் நிதிஷை பேய், பிசாசு என திட்டித் தீர்க்கும் லாலு, ரப்ரிதேவி: டிவிட்டரில் கலகலப்பு

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமாரையும், அவருடைய கூட்டணி கட்சித் தலைவர்களையும் பேய், பிசாசுகள் என லாலுவும், அவரது மனைவியும் திட்டி தீர்க்கின்றனர்.  பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் தற்போதைய பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரும் ஒரு காலத்தில் அண்ணன், தம்பியாக பழகினர். லாலுவின் மனைவி ரப்ரி தேவியை ‘பாபி’ (அண்ணி) என்றுதான் நிதிஷ் அழைப்பார். லாலு பிரசாத் கடந்த 1990ம் ஆண்டு பீகார் முதல்வரானார். கடந்த 1997ம் ஆண்டு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கி சிறை செல்ல வேண்டி இருந்ததால், மனைவி ரப்ரி தேவியை முதல்வராக்கினார். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள முதல்வரின் அரசு பங்களாவில் இருவரும் லாலுவும், ரப்ரிதேவியு–்ம 15 ஆண்டுகள் வசித்தனர். கடந்த 2005ம் ஆண்டு நிதிஷ் குமார் முதல்வரானதும் அந்த வீட்டில் குடியேறினார். இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் லாலுவுடன் தான் நகைச்சுவையாக பேசிய விஷயம் ஒன்றை நிதிஷ் சமீபத்தில் டிவிட்டரில் வெளியிட்டார்.

அதில், லாலுவை மிகவும் மட்டம் தட்டும் வகையில் அவர் கூறியிருந்தார். இதனால் கோபமடைந்துள்ள லாலுவும், ரப்ரிதேவியும் நிதிஷ் குமாரையும், அவருடைய கூட்டணி கட்சித் தலைவர்களையும், ‘பேய்கள், பிசாசுகள்’ என டிவிட்டரில் திட்டி தீர்க்கின்றனர்.
ரப்ரிதேவி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘முதல்வர் இல்லத்தை நாங்கள் கடந்த 2005ம் ஆண்டு காலி செய்த பின், அங்கு ஒரு பேயை விட்டு விட்டு வந்தேன். 15 ஆண்டு கழித்தும், நிதிஷ் தனது வீட்டில் உள்ள கண்ணாடியை பார்க்கும்போது நிச்சயம் பேயை பார்ப்பார்,’ என கூறியுள்ளார். சிறையில் இருந்தபோதிலும் லாலு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பீகார் மக்கள் தங்களை பிடித்துள்ள தீய சக்திகளை இந்த முறை விரட்டியடிப்பர்,’ என கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, ‘‘நவீன அறிவியல் காலத்திலும், லாலுவும், அவரது மனைவியும் பிற்போக்குத்தனமாக மூடநம்பிக்கையுடன் உள்ளனர்,’’ என்றார்.

Tags : Nitish Shah ,Nitishi ,Bihar ,Devil ,Lalu Bihar , Bihar Chief Minister Nitish, Lalu, Rabri Devi
× RELATED பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு...