×

வாக்குசீட்டில் வேட்பாளர்சின்னம் இல்லை.. 2 மணி நேரமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு

திருச்சி : வாக்குசீட்டில் வேட்பாளர்சின்னம் இல்லை என்று பெண் சுயேச்சை வேட்பாளர்  வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் 2 மணி நேரமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20- வது வார்டு் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக, பிஜேபி் மற்றும்  சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேர் போட்டியிட்டனர்.  இதற்கான வாக்குபதிவு கடந்த 30- ம் தேதி அன்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்றது.

இந்த வாக்கு சாவடியில் மங்கம்மாள்புரம், சங்கமராஜபுரம், ஆதிகுடி ஆகிய கிராம மக்கள் வாக்களித்தனர்.   அப்போது மதிய நேரத்திற்கு பிறகு வாக்குசீட்டில் சுயேட்சை வேட்பாளர் செல்வராணி போட்டியிட்ட சின்னம்  மற்றும் பெயரும் இல்லை.  இது குறித்து சுயேட்சை வேட்பாளர் செல்வராணி அப்போதே லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலரும் , தேர்தல் நடத்தும் அதிகாரிகளியிடம் முறையிட்டதால் அதிகாரிகள் 2 மணி நேரமாக எண்ணிக்கையை நிறுத்தி வைத்தனர்.

அதன் பிறகு பாதிக்கப்பட்ட வேட்பாளரிடம் எழுத்துபூர்வமாக புகார் பெற்ற அதிகாரிகள் மீண்டும் வாக்குபதிவினை நடத்தினர். இது குறித்து பாதிக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வராணி  , மறுவாக்கு பதிவு நடத்திட திருச்சி மாவட்ட ஆட்சியர் சீவராசுவிடம் புகார் மனு அளித்தார். சுயேட்சை வேட்பாளர் செல்வராணி, லால்குடி குமுளூர் வேளாண்மை பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது, சுயேச்சை வேட்பாளர் வாக்கு எண்ணிக்கையை தடுத்தி நிறுத்தினார். வாக்கு மையத்திற்குள் வந்த போலீஸார் பெண் வேட்பாளை தாக்கி வாக்கு மையத்தினை விட்டு வெறியேற்றி கைது செய்தனர். இதனால் வாக்கு மையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags : No ballot, papers , ballot
× RELATED சிவசேனா, தேசியவாத காங்கிரசை போல்...