தருமபுரி: தருமபுரி அரூர் ஒன்றியம் மருதப்பட்டில் 1-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் சென்னம்மாள் வெற்றி பெற்றுள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 315 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.