நெல்லை: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய புகாரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை தனியார் மருத்துவமனையில் நெல்லை கண்ணன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நெல்லை கண்ணனிடம் விசாரிப்பது பற்றி முடிவு எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.