×

சேலத்தில் தாய் உதவியுடன் 13 வயது சிறுமியிடம் போலீஸ்காரர் சில்மிஷம்: போக்சோவில் இருவர் மீதும் வழக்கு

சேலம்: சேலத்தில் 13 வயது சிறுமியிடம் சிலுமிஷத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீதும் உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்தது. இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் காவல்நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருபவர் சரவணன். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மீது 13 வயது சிறுமி ஒருவர் மாநகர போலீசில் புகார் அளித்தார். அதில் போலீஸ்காரர் சரவணன் தன்னிடம் சிலுமிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டிருந்தது. விசாரணையில் சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் சிறுமியின் தாய் மீதும், சில்மிஷத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர் சரவணன் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீது போக்சோ சட்டம் பாய்ந்ததை தெரிந்து கொண்ட சரவணன், உடனே தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர் வேலை செய்யும் இடத்தில் சென்று விசாரித்ததில், அவர் ஒரு மாதமாக வேலைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில் போலீஸ்காரர் சரவணன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


Tags : Silmisam ,Salem In Salem , Salem, help of a mother, a 13-year-old girl, policeman Silmisam
× RELATED தாயுடன் சென்ற கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்