×

குழந்தைகளை பரிதவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம் சாதாரண பிரிவில் வழக்குப்பதிவதா?: போலீசாருக்கு நீதிமன்றம் கண்டனம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்  அருகே 2 குழந்தைகளை தவிக்கவிட்டு  கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண்  மீது சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசாருக்கு நீதிமன்றம் கண்டனம்  தெரிவித்து எப்ஐஆரை மாற்ற உத்தரவிட்டது.திருவனந்தபுரம்  அருகே காட்டாக்கடை வெள்ளநாடு பகுதியைச் சேர்ந்தவர்  பிஜூ (28). இவரது மனைவி  சரண்யா (24). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.  இந்த நிலையில் சரண்யாவுக்கும்   அதே பகுதியைச் சேர்ந்த கிரண்(27) என்ற ஆட்டோ  டிரைவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த  27ம்  தேதி சரண்யா தனது குழந்தைகளை தாய் வீட்டில்விட்டுவிட்டு  கள்ளக்காதலனுடன்  ஓட்டம் பிடித்தார்.

 இது தொடர்பாக பிஜூ நெய்யாறு அணை போலீசில்  புகார்  செய்தார். போலீசார் பெண் மாயம் என்று வழக்குப் பதிவு செய்து தேடினர்.அப்போது கிரணுடன், சரண்யா இருப்பதை கண்டுபிடித்து இருவரையும் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2  குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண் மீது  சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்தது. அதோடு  இந்த வழக்கை மாற்றி கள்ளக்காதல் ஜோடி மீது குழந்தைகள் பாதுகாப்பு  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்படி போலீசார்  கள்ளக்காதல் ஜோடி மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு  செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர். இந்த சம்பவம் திருவனந்தபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Woman's ,Flirtation, Child ,Abuse
× RELATED ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை...