×

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அரசு தேர்வு சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவியல் செய்முறை பயிற்சி பெற்ற தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்த தனித்தேர்வர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government Examinations Directorate ,Class X General Examination ,Class X , Tenth Class, General Elections, Individual Selectors, Government Examinations Directorate
× RELATED 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு...