×

பாதிக்கப்பட்டோரை சந்தித்து உதவுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் கோரிக்கை

புதுடெல்லி:  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உதவி செய்யுங்கள் என காங்கிரஸ் கட்சியினரை ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின்போது சில இடங்களில் வன்முறை வெடித்தது. இதுபோன்ற சம்பவங்களில் சிக்கி நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போராட்டத்தின்போது உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், “நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள், பெண்கள் காயமடைந்தனர். மேலும் போராட்டத்தின்போது சிலர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் நிர்வாகிகள் செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்ட வீடியோவையும் அவர் இணைத்துள்ளார்.



Tags : Congress ,Rahul ,executives ,victims , Rahul,calls, Congress executives, victims
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...