ஆரணி: உள்ளாட்சி தேர்தல் ஆரணி ஒன்றியத்துக்கு உட்பட்ட சேவூர் கிராமத்தில் நடந்த வாக்குப்பதிவை ரத்து செய்ய கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக நிர்வாகி சிவானந்தம் மனு அளித்துள்ளார். அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஊரான சேவூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு தலா 25 கிலோ அரிசி சிப்பம் வளக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.