×

கேரளாவில் முதியோர் இல்லத்தில் காதலித்த 67 வயது மணமகனுக்கும் 65 வயது மணப்பெண்ணுக்கும் திருமணம்

திருவனந்தபுரம்: கேரளாவில் முதியோர் இல்லத்தில் காதலித்த 67 வயதான லட்சுமி அம்மாள் என்பவரும் திருமணம் செய்து கொண்டனர். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ராமவர்மபுரத்தில் முதியோர் இல்லம் உள்ளது. இது அரசால் நடத்தப்படுகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.அவர்களுள் கோச்சானியன் (67), லட்சுமியம்மாள் (66) ஆகியோர் தங்கியிருந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு தற்போது திருமணம் நடந்துமுடிந்துவிட்டது.

முதியோர் இல்லத்தில் நடந்த இந்த திருமணத்தில் வேளாண்துறை அமைச்சர் சுனில் குமார் கலந்து கொண்டார். மேலும் மணமக்களை வாழ்த்தினார். லட்சுமி அம்மாளின் கணவரிடம் கோச்சானியான் உதவியாளராக இருந்துள்ளார். 21 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்த பின்பு லட்சுமி அம்மாள் உறவினர்களுடன் சென்றுவிட்டார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ராமாவர்மபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் லட்சுமி அம்மாள் சேர்ந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு அங்கு கோச்சானியானும் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags : bride ,Kerala ,home , Kerala, Home for the Elderly, Marriage
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...