×

சென்னையில் கத்தி முனையில் தொழிலதிபர் கடத்தல்: தொழிலதிபரிடம் ரூ.25 கேட்டு ரவுடிகள் மிரட்டல்

சென்னை: சென்னையில் கத்தி முனையில் தொழிலதிபரை கடத்தி ரூ.35 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த முகேஷ் என்பவர், அம்பத்தூரில் லாஜிஸ்டிக் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு வில்லிவாக்கம் சென்ற முகேஷை அவரது காரில் வைத்தே பிரபல ரவுடி தில் பாண்டி மற்றும் அவரின் கூட்டாளிகள் கடத்தி சென்றுள்ளனர். காரை கோயம்பேட்டை நோக்கி ஒட்டி சென்ற அவர்கள் முகேஷியிடம் ரூ.25 லட்சம் தரும் படி அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

அப்போது காரில் இருந்து குதித்து தப்பிய முகேஷ் மதுரவாயல் நிலைய காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரவுடி கும்பலுக்கு பணம் தர மறுத்ததால் எனது கார், லேப்டாப், செல்போனை பறித்து சென்றுவிட்டதாக முகேஷ் கூறியுள்ளார். முகேஷ் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய தில் பாண்டி மற்றும் அவரின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.


Tags : Businessman ,businessman Businessman ,Chennai ,Routes , Businessman, knife, Chennai,businessman
× RELATED ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது