திருவனந்தபுரம்: நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காத அமித்ஷா ராகுலை விவாதத்திற்கு அழைப்பதா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை, மாநிலங்களவையில் நடந்த விவாதங்களை அமித்ஷா முதலில் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் குடியுரிமை சட்டத்தில் எல்லாமே தவறாக உள்ளது என கேரளாவின் திருவனந்தபுரத்தில் ப.சிதம்பரம் பேசினார்.