×

திருப்புத்தூர் அருகே ‘வயல் வழி’ மயான பாதையும் அடைப்பு: இறந்தவர் உடலை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் அவதி

திருப்புத்தூர்:  திருப்புத்தூர் அருகே மயானத்திற்கு செல்லும் வயல் வழி பாதையும் அடைக்கப்பட்டதால், இறந்தவர் உடலை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் அவதிக்குள்ளாயினர்.  சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிரமாணபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (65). இவர் நேற்று அதிகாலை இறந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் வழக்கமாக மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள தனியார் நிலத்தில் முள்வேலி அமைக்கப்பட்டிருந்தது.  இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தாசில்தார் ஜெயலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், நில உரிமையாளர் நாச்சியம்மாளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கடந்த முறையே மாற்றுப்பாதை ஏற்பாடு செய்வதாக வருவாய்த்துறையினர் உறுதிமொழி அளித்தும், இதுவரை நிறைவேற்றவில்லை என்று நில உரிமையாளர் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள், ‘‘ஜனவரி மாதத்திற்குள் மயானத்திற்கு செல்ல மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்படும்’’ என உறுதிமொழி அளித்தனர். அதன்பிறகே மயானத்திற்கு பாதை அனுமதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Thiruputhur Thiruputhur , Thirupputhur, field, dead body, relatives
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இயல்பைவிட...