×

அயோத்தியில் தாக்குதல் நடத்த பாக். தீவிரவாதிகள் சதித்திட்டம்

புதுடெல்லி: பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கம் ஜெய்ஷ் இ முகமது. இந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவில் பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபடுவது வழக்கம். தற்போது அவர்கள், அயோத்தி நகரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாக அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகத்தின் வாயிலாக இதுகுறித்து ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது  உளவுத்துறையால் இடைமறித்து அறியப்பட்டுள்ளது. இதையடுத்து அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Ayodhya ,Bagh ,extremists , Ayodhya, attack, Pak. Terrorists, conspiracy
× RELATED அயோத்தியில் பிரதமர் மோடி பிரசாரம்