×

ஐயப்பன் கோயிலில் பக்தரின் செல்போன் வெடித்து சிதறியது: சாமி கும்பிட்டவர்கள் ஓட்டம்

கோவை: கோயிலில் சாமி கும்பிட்டபோது ஐயப்ப பக்தரின் செல்போன் வெடித்து சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை ராமநாதபுரம் நாச்சி அங்கண்ணன் வீதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் பிரகாஷ் (26). இவர், குறிச்சி சிட்கோவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி வித்யா. தம்பதிக்கு ஒரு மகன். ஒரு மகள் உள்ளனர்.

பிரகாஷ், கடந்த 14 வருடமாக மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று வருகிறார். இந்த ஆண்டும் சபரிமலை செல்ல மாலை அணிந்துள்ளார். நேற்று ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் சாமி கும்பிட பிரகாஷ் சென்றார். அப்போது தனது செல்போனை தரையில் வைத்துவிட்டு சாமி கும்பிட்டு விட்டு எழுந்தபோது தரையில் வைத்திருந்த செல்போனில் இருந்து புகை வந்தது. அவற்றை எடுக்க முயன்றபோது பயங்கர சத்தத்துடன் செல்போன் வெடித்து சிதறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரகாஷ் கூறுகையில், ‘எனது கையில் இருக்கும்போது செல்போன் வெடித்திருந்தால் உடல் கருகி இருக்கும், நான் வீட்டில் இருக்கும்போது குழந்தைகள் செல்போனில் விளையாடிக் கொண்டிருப்பார்கள், அப்போது வெடித்திருந்தாலும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும். ஐயப்பன் அருளால் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை’. என்றார்.

Tags : Devotees ,Ayyappan temple ,Sami , Cellphone
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்