×

சொல்லிட்டாங்க...

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பொய்த் தகவலை பரப்பி, சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளை தூண்டி விட எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.
- பிரதமர் மோடி.

பேரணி நடத்துவதற்குகூட அனுமதி இல்லை என்றால் அது ஜனநாயகம் அல்ல; அது ஒரு சர்வாதிகார போக்கு. மோடியை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு அனுமதி மறுத்திருக்கிறது.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

சாலையை சீரமைக்கும் விஷயத்தில் மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் காட்டும் அலட்சியம் சாலையில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பில் அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.
- பாமக நிறுவனர் ராமதாஸ்.

இந்தியா மதசார்பற்ற நாடு. மதசார்பற்ற தன்மையில் இருந்து ஆட்சியாளர்கள் விலகும்போது, பல்வேறு பாதிப்புகளை நாடு சந்திக்க நேரும்.
- அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்.

Tags : rallying ,Mutarasan , Even rallying is not allowed, it is not democracy, Mutarasan
× RELATED ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி...