×

தேர்தல் நடத்தை விதிகளின்படி பிரசாரத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்த கட்டுப்பாடுகள்: மாநில தேர்தல் ஆணையம் ஆணை

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளின்படி தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கிகளை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தவும், முறைப்படுத்தவும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றிடவும், தேர்தல் நடத்தை விதிகளின்படி தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கிகள் போன்றவற்றை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தவும், முறைப்படுத்தவும் பின்வரும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆணை வெளியிட்டுள்ளது.

தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடங்கி, தேர்தல் நடைபெறும் நாள் வரை, தேர்தல் பிரசாரங்களுக்காக எந்தவொரு வகை வாகனங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளை காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. பொதுக்கூட்டங்களுக்கு அல்லது ஊர்வலங்களுக்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டுமாயின் காவல்துறையின் எழுத்து மூலமான முன்அனுமதி பெற வேண்டும். மேலும் ஒலி பெருக்கிகளை பொது அமைதிக்கு இடையூறு ஏற்படாதவாறு அனுமதிக்கப்பட்ட காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வரையறுக்கப்பட்ட நேரங்களுக்கு அப்பாலும் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எழுத்து மூலமான அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலி பெருக்கிகளும், அதனை பயன்படுத்துவதற்கு தொடர்புடைய அனைத்து கருவிகளுடன் பறிமுதல் செய்யப்படும். மேலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியமைக்கு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : State Election Commission , Election Conduct, Rules, Propaganda, Subwoofer, Restrictions, State Election Commission
× RELATED இந்தியாவிலேயே அதிகம் கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு