×

கொள்ளிடம் அருகே பஸ் நிறுத்த கட்டிடத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் பஸ் நிறுத்தக் கட்டிடத்திற்குள் குவிந்துள்ள உடைந்த பாட்டில்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம், நல்லூர், ஆரப்பள்ளம் வழியாக புளியந்துறை மற்றும் புதுப்பட்டினத்திற்குச் செல்லும் நெடுஞ்சாலையில் ஆரப்பள்ளத்தில் பஸ் நிறுத்தக் கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்திற்குள் கடந்த ஒரு வருட காலமாக மது அருந்துபவர்கள், பாட்டில்களை உடைத்து குவிக்கப்பட்ட பாட்டில் ஓடுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒன்று சேர்ந்து குவியலாகச் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

இதே போல் தொடர்ந்து குப்பைகள் போடப்பட்டதால் பயணிகள் அங்கு காத்திருக்க முடியாமல் சாலை ஓரம் நின்று பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். எனவே பஸ் நிறுத்தத்தில் உள்ள அசுத்தமான குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : bus stop ,hut ,Bus stand , kollidam ,wastes, sewage,people affected
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை