×

விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு சாக்லெட் சிலை

புதுச்சேரி: இந்தியாவில் இந்தாண்டு தொடக்கத்தில் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்கியது. அப்போது, விமானம் விழுந்து நொறுங்கியதால் பாகிஸ்தான் ராணுவத்தினரால் இந்திய விமானப்படை விங்  கமாண்டர் அபிநந்தன் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.  தற்போது, கிறிஸ்துமஸ்  பண்டிகையையொட்டி அவரை  கவுரவிக்கும் வகையில், புதுச்சேரி காந்தி வீதியிலுள்ள கடை ஒன்றில் 341 கிலோ சாக்லெட் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அபிநந்தனின் உருவம் 5 அடி உயரம், 10 அங்குலத்தில்  சாக்லெட்டால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை அனைவரும் பார்த்து  ரசித்து செல்கின்றனர்.

Tags : veteran ,Abhinandan Air Force ,Abhinandan for Chocolate Idol , Air Force soldier Abhinandan, chocolate statue
× RELATED திண்டுக்கல்லில் முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்