புதுச்சேரி: தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ரவுடி ஜனா, கூட்டாளி ராகவனுடன் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். சன்னியாசி குப்பத்தில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோடிய வழக்கில் ரவுடி ஜனாவை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. தலைமறைவாக இருந்த ரவுடி ஜனாவை திருபுவனை சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவன் சரணடைந்துள்ளான். ரவுடி ஜனா மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொலை வழக்கு உள்பட 45 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.