×

மேலூர் அருகே நடைப்பயிற்சி சென்ற அமமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 6 பேர் கொண்ட கூலிப்படை அட்டகாசம்

மேலூர்: மேலூர் அருகே அமமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர் அசோகன் (50). கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர். அமமுகவில் உள்ளார்.நேற்று காலை மேலூர் - அழகர்கோவில் சாலையில் உறவினர் கார்த்திக்குடன் சேர்ந்து, அசோகன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். செட்டியார்பட்டியை அடுத்த மொட்டப்பாறை அருகில் சென்றபோது, எதிரில் 3 டூவீலர்களில் முகத்தை துணியால் மூடியபடி வந்த 6 பேர், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டியதால் கார்த்திக் தப்பி ஓடினார். அதன் பிறகு 6 பேரும் அசோகனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு டூவீலரில் தப்பிச்சென்றனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்து ஏடிஎஸ்பி வனிதா விசாரணை நடத்தினார். கொலை முயற்சி நடந்தபோது அசோகன், கொலையாளிடமிருந்த பட்டாக்கத்தி ஒன்றை தட்டி விட்டுள்ளார். அது அருகில் உள்ள குளத்தில் விழுந்து கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். அந்த பட்டாக் கத்தி சுமார் 2 அடி நீளம் இருந்தது. கூலிப்படையினர் மட்டுமே அதுபோன்ற கத்தியை பயன்படுத்துவார்கள் என்றும், அதற்கு அவர்கள் ‘ராம்போ கத்தி’ என்று பெயர் வைத்துள்ளார்கள் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதனிடையே கொலையாளிகளை கண்டுபிடிக்கும் வரை அசோகன் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் மேலூர் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.  கொலைக்கு அரசியல் காரணமா, முன்விரோதம் காரணமா என ‘விசாரித்து வருகின்றனர்.


Tags : Ammo leader ,Melur Vettikolai ,Mellur ,Vettikolai ,walk-in , Near Mellur, a walk-in, an amoral figure, Vettikolai
× RELATED மதுபாட்டில்கள் விற்ற இருவர் மீது வழக்கு