×

ஒட்டன்சத்திரத்தில் வீட்டிற்குள் புகுந்த சாம்பல்நிற அணில்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே வீட்டிற்குள் புகுந்த சாம்பல் நிற அணிலை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காளாஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் கிறிஸ்பின் வெஸ்லி. கல்லூரியில் செய்தி தகவல் தொடர்பு அலுவலராக உள்ளார். இவரது வீட்டில் நேற்று அரிய வகை சாம்பல் நிற அணில் புகுந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று சாம்பல் நிற அணிலை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை அவர்கள் ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Tags : house , Squirrel
× RELATED ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது